நாமகிரிப்பேட்டை, செப்.26: ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம், ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தினர். முகாமிற்கு பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ராசிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் செல்வி முன்னிலை வகித்தார். இதில் சர்க்கரை பரிசோதனை, இ.சி.ஜி., கர்ப்பப்பை புற்று, மார்பக புற்று, தொற்று நோய்களுக்கான பரிசோதனை, காசநோயை கண்டறிவதற்கான எக்ஸ்ரே, தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகள் நடந்தது. முகாமில் செயல் அலுலவர் பிரபாகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் காவேரியம்மாள், கிருஷ்ணமூர்த்தி, கந்தசாமி, பானுமதி, உஷாராணி, தனபால், கீதா, சீனிவாசன் மற்றும் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
previous post