சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் (பொறுப்பு) ஜெ.செல்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை: சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் நீதிமன்ற பதிவாளர் (ஜுடீசியல்) ஜெ.செல்வநாதன் பதிவாளர் (ஆய்வு) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட நீதிபதி ஏ.அப்துல் காதர் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளராகவும் (ஜிடீசியல்), மதுரை கிளை கூடுதல் பதிவாளர் ஜி.ஸ்ரீராமஜெயம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளராகவும் (விஜிலன்ஸ்), சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் கே.சீத்தாராமன் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளராகவும் (ஜுடீசியல்), தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி கே.அய்யப்பன் உயர் நீதிமன்ற மதுரை கிளை கூடுதல் பதிவாளராகவும் (விஜிலென்ஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜுடீசியல்) என்.வேங்கடவரன் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 1வது கூடுதல் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி கே.கார்த்திகேயன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.