வேதாரண்யம்,செப்.24: வேதாரண்யம் சி.க.சு அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சி.க.சு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். விருது பெற்ற ஆசிரியர் மகேந்திரனை,
வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி, வர்த்தக சங்க மாநிலத் துணைத் தலைவர் தென்னரசு, தமிழ்நாடு அனைத்து உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர். விருது பெற்று ஆசிரியர் மகேந்திரனை உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.