பண்ருட்டி, செப். 24: பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார். பண்ருட்டி அருகே கிராமத்தை சேர்ந்த 16வயது சிறுமி. அங்குள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அவரது தந்தை தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது மனைவி, தன் மகள் தொடர்ந்து அழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகளிடம் விசாரித்தபோது தந்தை தவறாக நடந்து கொண்டது குறித்து தெரிவித்துள்ளார்.
உடனே அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. இதனையடுத்து பண்ருட்டி மகளிர் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார், வழக்கு பதிவு செய்து போக்சோவில் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.