தர்மபுரி, செப்.24: கடத்தூர் அருகே உள்ள வெங்கடதாரஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் மகள் கார்த்திகா (18). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கார்த்திகா கல்லூரியில் இருந்து பாடத்தை செல்போன் மூலம் அனுப்புவதால், எனக்கு செல்போன் வாங்கி தருமாறு பெற்றோரிடம் கேட்டார். அவர்கள் தற்போது பணம் இல்லை, பிறகு வாங்கி தருவதாக தெரிவித்தனர். இதில் மனவேதனை அடைந்த கார்த்திகா, கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா ேநற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தற்கொலை
previous post