பெரம்பூர்: நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, கடந்த 21ம் தேதி பாஜவை சேர்ந்த தர்விந்தர் சிங் மாவா என்பவர் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு அறிவுறுத்தலின்படி வடசென்னை மேற்கு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சர்க்கிள் தலைவர்கள், பாஜவை சேர்ந்த தர்விந்தர் சிங் மாவா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்து வருகின்றனர். அதன்படி எம்கேபி நகர் மற்றும் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பெரம்பூர் 2வது சர்க்கில் தலைவர் ரஜினி செல்வம் புகார் மனு அளித்தார். இதேபோன்று ஓட்டேரி காவல் நிலையத்தில் நிர்வாகிகள் சுந்தர், நிலவன், ஷேக், சதீஷ், சுகன் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர். இவ்வாறு வட சென்னை மேற்கு மாவட்டத்தில் மட்டும் சுமார் 9க்கும் மேற்பட்ட புகார்கள் தரப்பட்டுள்ளன.
பல்வேறு காவல் நிலையங்களில் பாஜ நிர்வாகி மீது காங்கிரசார் புகார்
previous post