Tuesday, September 24, 2024
Home » இடம் ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக இரு தரப்பினர் மோதலில் 4 பேர் மீது வழக்குபதிவு

இடம் ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக இரு தரப்பினர் மோதலில் 4 பேர் மீது வழக்குபதிவு

by Ranjith

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்ததாக அளித்த புகாரில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் மீது, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே சித்தப்பனூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதன்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வனத்துறைக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ள நபர்களுக்கு, நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.

இவ்வாறு, நோட்டீஸ் வழங்கியதற்கு அன்பரசு(39) என்பவர்தான் காரணம் எனக்கருதி, அதே கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவர், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், இச்சம்பவம் தொடர்பாக கடந்த 10ம்தேதி இரு தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினர் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில், தகராறில் ஈடுபட்ட விநாயகம், சுதா, காமேஷ், அன்பரசு ஆகிய 4 பேர் மீதும், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

two + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi