ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – கலைத்திருவிழா போட்டிகள் – பள்ளி அளவிலான போட்டிகள் நடத்திட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 2024 -25ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடத்துவது சார்ந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்துவதற்கான கால வரம்பு நீட்டிப்பு சார்ந்து மாவட்டங்களிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றதைத் தொடர்ந்து , பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றியாளர்களின் விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்வதற்கு 27.09.2024 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. இப்போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் (சிறப்புப் பள்ளிகள் உட்பட) அனைத்து மாணவ, மாணவியருக்கும் வாய்ப்பளித்தல் வேண்டும். இந்த விவரத்தினை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் (சிறப்புப் பள்ளிகள் உட்பட) தெரிவித்து மாணவர்களை பங்கேற்க அறிவுறுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.