Friday, September 20, 2024
Home » வீட்டு வேலைக்காக சேர்ந்து குமரி டாக்டரின் மகனை மயக்கி 50 பவுன் நகையை சுருட்டி ரகசிய குடும்பம் நடத்திய இளம்பெண்: 5 பேரை திருமணம் செய்தது அம்பலம்

வீட்டு வேலைக்காக சேர்ந்து குமரி டாக்டரின் மகனை மயக்கி 50 பவுன் நகையை சுருட்டி ரகசிய குடும்பம் நடத்திய இளம்பெண்: 5 பேரை திருமணம் செய்தது அம்பலம்

by Neethimaan

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே டாக்டரின் வீட்டில் வேலைக்காக சேர்ந்து அவரது மகனை மயக்கி 50 பவுன் நகையுடன் இளம்பெண் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணையில் இளம்பெண், 5 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர், தங்களது வீட்டில் வேலை செய்ய பெண் ஒருவர் தேவை என்று தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் விண்ணப்பித்து இருந்தார். உடனே நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தங்களிடம் வேலைக்காக விண்ணப்பம் அளித்திருந்த பெண்களின் பயோ டேட்டாவை பரிசீலனை செய்தனர்.

அதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்ைட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவரை நியமித்தனர். அவரும், நாகர்கோவில் அருகே உள்ள டாக்டர் வீட்டில் வேலைக்காக சேர்ந்தார். வீட்டு வேலை மட்டுமின்றி டாக்டரின் வீட்டில் இருந்த வயதான அவரது பெற்றோரையும் கவனித்தார். நல்ல முறையில் வீட்டு வேலைகளை செய்ததால், மிக விரைவிலேயே டாக்டர் குடும்பத்தில் ஒருவராகவே இளம்பெண் மாறினார். அவர் கேட்ட சம்பளத்தை விட அதிகமாகவே டாக்டர் வீட்டில் இருந்து பெண்ணுக்கு கொடுத்து உதவினர்.

இந்தநிலையில் டாக்டருக்கு, ஒரு மகன் உள்ளான். இன்னும் திருமணமாகவில்லை. சற்று உடல் நிலை சரியில்லாத நிலையில் திருமணம் தள்ளிக் கொண்டே சென்றுள்ளது. இதற்கிடையே வீட்டு வேலைக்காக வந்த இளம்பெண்ணுக்கும், டாக்டரின் மகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமாக பழகினர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையிலும் இருந்தனர். இளம்ெபண் மீதான மோகத்தில் டாக்டர் மகன் மூழ்கி போனார். இந்த விவகாரம் மெல்ல, மெல்ல டாக்டர் வீட்டில் புயலை கிளப்பியது. இதனால் இளம்பெண்ணை வேலையில் இருந்து நிறுத்த முடிவு செய்தனர்.

ஆனால் இதற்கு மகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தொடர்ந்து வேலைக்கு வந்துக் கொண்டிருந்த பெண், திடீரென மாயம் ஆனார். அவருடன் டாக்டரின் மகனும் மாயமாகி விட்டார். வீட்டில் இருந்த சுமார் 50 பவுன் நகைகளையும் காண வில்லை. இதனால் பதற்றம் அடைந்த டாக்டர் குடும்பத்தினர், எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். ஆனால் இது தொடர்பாக எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. செல்போன்களை ஆய்வு செய்த போது ஒவ்வொரு இடமாக மாறி, மாறி வந்தது.

ஒரு கட்டத்தில் வெளி மாநிலத்துக்கு அவர்கள் சென்றது தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் விடாமல் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த வாரம் திருநெல்வேலிக்கு இவர்கள் வந்திருந்த தகவல் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சென்று இளம்பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு சோதனை செய்தனர். அங்கு இளம்பெண், டாக்டர் மகனுடன் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை விசாரணைக்காக நாகர்கோவில் அழைத்து வந்தனர். போலீஸ் விசாரணையில் இளம்பெண் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் ஏற்கனவே 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

மேலும் 5 வதாக டாக்டரின் மகனை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதை கேட்டதும் போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளில் தனியாக இருப்பவர்களை கவனிப்பது போல் சென்று அந்த வீடுகளில் உள்ளவர்களிடம் பழகி ஏமாற்றி வந்ததும் தெரிய வந்தது. ஆனால் இதுவரை யாரும் புகார் அளிக்க வில்லை. தற்போது டாக்டர் குடும்பத்தினரும் புகார் எதுவும் வேண்டாம். நகைகளை மட்டும் மீட்டு கொடுங்கள் என காவல்துறையினரிடம் கூறினர். இதையடுத்து நகைகளை மீட்டு, கொடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைக்காக பெண்களை பணி அமர்த்துபவர்கள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

போலீஸ் விசாரணையில் இளம்பெண் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் ஏற்கனவே 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். மேலும் 5 வதாக டாக்டரின் மகனை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதை கேட்டதும் போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளில் தனியாக இருப்பவர்களை கவனிப்பது போல் சென்று அந்த வீடுகளில் உள்ளவர்களிடம் பழகி ஏமாற்றி வந்ததும் தெரிய வந்தது. ஆனால் இதுவரை யாரும் புகார் அளிக்க வில்லை. தற்போது டாக்டர் குடும்பத்தினரும் புகார் எதுவும் வேண்டாம். நகைகளை மட்டும் மீட்டு கொடுங்கள் என காவல்துறையினரிடம் கூறினர்.

You may also like

Leave a Comment

five − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi