Friday, September 20, 2024
Home » பொன்னமராவதி அருகே ஆலவயலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

பொன்னமராவதி அருகே ஆலவயலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

by Ranjith

 

பொன்னமராவதி,செப்.20: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பகுதி பொதுமக்கள் பொன்னமராவதி அல்லது கொப்பனாபட்டிக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அவசர சிகிச்சை நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலையுள்ளது.

எனவே ஆலவயலில் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அமைத்து ஆலவயல், பெரியஊரணி, தெக்கிகாடு, ஈசிகூடம், பண்னைக்களம், வடக்கிப்பட்டி, பிடாரம்பட்டி, மணத்தொண்டி, கருமங்காடு பரமன்கூடம், வைரம்பட்டி, சின்னப்பிச்சன்பட்டி, செம்மலாபட்டி, குளவாய்காடு, புலவர்ணாகுடி, குளவாய்பட்டி, இடையாத்தூர், இடையபட்டி, தூத்தூர் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ வசதி பெறமுடியும். என இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு ஆரம்பசுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi