புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 34வது கூட்டம் வரும் 27ம் தேதி அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஆணையத்தின் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய கூட்டத்தின் போது முன்னதாக ஒழுங்காற்று குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நீர் பங்கீடு மேற்கொள்வது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து நீர் வளத்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் காவிரி ஆணையம் வரும் 27ல் கூடுகிறது
previous post