Friday, September 20, 2024
Home » ‘’எதிர்பார்த்தவர்களின் மூக்கு அறுபட்டது’’ திமுக- விடுதலை சிறுத்தைகள் கொள்கை கூட்டணி தொடரும்: தொல்.திருமாவளவன் திட்டவட்டம்

‘’எதிர்பார்த்தவர்களின் மூக்கு அறுபட்டது’’ திமுக- விடுதலை சிறுத்தைகள் கொள்கை கூட்டணி தொடரும்: தொல்.திருமாவளவன் திட்டவட்டம்

by Neethimaan


பெரம்பூர்: திமுக- விடுதலை சிறுத்தைகளின் கொள்கை கூட்டணி தொடரும் என்றும் எதிர்பார்த்தவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி கூறினார். ரெட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி, ஓட்டேரி இடுகாட்டில் உள்ளஅவரது நினைவிடத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று காலை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதன்பிறகு நிருபர்களிடம் கூறியதாவது; விஜய், பெரியார் திடலில் மரியாதை செலுத்தியதை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றேன், அதை பாராட்டி சமூக ஊடக பக்கங்களிலும் பதிவு செய்து இருக்கிறேன்.

சமூகநீதி பார்வையோடு விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிப்பதுடன் மிகுந்த நம்பிக்கையையும் அளிக்கிறது. பெரியார் அரசியல் என்பது திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுக்கு மட்டுமல்ல, சமூகநீதி மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்குமானது. சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது, அந்த புரிதல் விஜய்க்கு இருப்பதைக் கண்டு உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். பெரியார் என்ற சொல் பாஜகவுக்கு பிடிக்காது. ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் பெரியார் என்ற சொல்லையே உச்சரிக்க மாட்டேன் என்று வெளியேறியவர். அந்த அளவிற்கு பாஜகவினருக்கு பெரியார் மீது ஒரு வெறுப்பு உள்ளது. மூக்கு அறுபட்டவர்களின் கூச்சல் இது புலம்பல் இது.

பாஜக எதிர்பார்த்தது நடக்கவில்லை, தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளது. இப்போதே தேர்தல் கணக்கு கூட்டணி கணக்கு என்று கூப்பாடு போட்டார்கள், கூச்சல் எழுப்பினார்கள் எப்படியாவது கூட்டணியில் விரிசல், பிளவு ஏற்படாதா என்று காத்து கிடந்தார்கள், எதிர்பார்த்து இருந்தார்கள், ஏமாந்து போனார்கள், அதனால் ஏற்பட்ட விரக்தி வெளிப்பட்டு வருகிறது. விசிகவும் திமுகவும் ஒரே நேர்கோட்டில் கொள்கை அளவில் பயணிக்கிறது. முரண்பாடான அரசியல் தான், ஆனால் இணைந்து பயணிப்போம் என்கிற முடிவு கொள்கை தளத்தில் இருவரும் இணையாக இருக்கிறோம் என்று உணர்த்துகிறது.

திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது. விசிக தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம். திமுகவுக்கு அதில் உடன்பாடு உள்ளது. அன்றே அண்ணா அந்த கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றாக வேண்டும் என்று எதுவும் கிடையாது. இவ்வாறு கூறினார்.

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi