Friday, September 20, 2024
Home » தாய் வீட்டு சீதனமாக அளித்த சொம்பை விற்று மது குடித்த கணவனை கொன்ற 2வது மனைவி: முதல் மனைவியின் புகாரால் நடவடிக்கை

தாய் வீட்டு சீதனமாக அளித்த சொம்பை விற்று மது குடித்த கணவனை கொன்ற 2வது மனைவி: முதல் மனைவியின் புகாரால் நடவடிக்கை

by Neethimaan

ரேபரேலி: உத்தரபிரதேசத்தில் தாய் வீட்டு சீதனமாக அளித்த சொம்பை விற்று மது குடித்த கணவனை, அவரது 2வது மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த விவசாயி நரசிங் யாதவ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி புஷ்பா தேவியுடன் வாழ்ந்து வந்த நரசிங் யாதவ், இரண்டாவதாக விமலா பாசி என்பவரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது வீட்டில் நரசிங் யாதவ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொலையா? தற்கொலையா? என்று பலரும் பலவிதமாக பேசிய நிலையில், தனது கணவரின் சாவுக்கு காரணம் மர்மமாக உள்ளதாக உள்ளூர் போலீசில் முதல் மனைவி புஷ்பா புகார் அளித்தார்.

அதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது, நரசிங் யாதவ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. அதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், நரசிங் யாதவின் இரண்டாவது மனைவி விமலா பாசி, தனது கணவரை கழுத்தை நெரித்துக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி பிரதீப் குமார் கூறுகையில், ‘குடிப்பழக்கத்துக்கு அடிமையான நரசிங் யாதவ், சம்பவ நாளில் வீட்டில் இருந்த சொம்புகளை விற்று மது வாங்கி குடித்துள்ளார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்த போது, வீட்டில் இருந்த சொம்பை விற்று மது குடித்ததாக மனைவியிடம் போதையில் உளறியுள்ளார். தனது தாய் வீட்டு சீதனமாக சொம்பை விற்று மது குடித்தாயா? என்று கூறி, கணவரிடம் விமலா ​​வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த அவர், கணவரை கழுத்தை நெரித்து கொன்றார். அவர் செய்த குற்றத்தை விமலா ஒப்புக்கொண்டார். தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

You may also like

Leave a Comment

thirteen − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi