Friday, September 20, 2024
Home » நடிகை சிஐடி சகுந்தலா மறைவு: இன்று மாலை இறுதிச்சடங்கு

நடிகை சிஐடி சகுந்தலா மறைவு: இன்று மாலை இறுதிச்சடங்கு

by Neethimaan


சென்னை: பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலாவின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்த நிலையில், ஜெய்சங்கர் நடித்த ‘சிஐடி சங்கர்’ படத்தில் நடித்தபோதுதான் இவரது பெயருக்கு முன் சிஐடி சேர்த்து சிஐடி சகுந்தலா என்ற பெயர் பிரபலமானது. சில படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எம்ஜிஆர் நடித்த ‘இதயக்கனி’ திரைப்படத்தில் வில்லியாக அவர் நடிப்பில் அசத்தியிருந்தார். ‘படிக்காத மேதை ’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’,‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை ’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் இருந்து விலகிய பிறகு, சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த சகுந்தலா, வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டில் சில ஆண்டுகளாக தங்கி இருந்தார். நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகள் தெரிவித்தார். சிஐடி சகுந்தலா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு பெங்களூரில் இன்று மாலை நடைபெறுகிறது.

You may also like

Leave a Comment

one + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi