சிவகங்கை, செப்.18: திருப்புவனத்தில் ஒன்றிய, நகர திமுக சார்பில் பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சமூக நீதியை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் தலைமை வகித்தார்.
நகர் செயலாளர் நாகூர்கனி முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் சேகர், மாவட்ட பிரதிநிதிகள் சுப்பையா, வெங்கடேசன், ஒன்றிய அவைத் தலைவர் இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர் மகேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவுக்கரசு, நகர இளைஞரணி அமைப்பாளர் கண்ணன், நகர் நிர்வாகிகள் கெங்குராமன், ராசு, மீனாட்சிசுந்தரம், பாலகிருஷ்ணன், பத்மாவதிமுத்துக்குமார், வேல்பாண்டி, ராமலட்சுமி பாலகிருஷ்ணன், சித்ராதேவி ஆறுமுகம், தொண்டரணி ராஜா, மீனவரணி அண்ணாமலை, கலுங்கை முருகன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர், மக்கள் கொண்டனர்.