போடி, செப், 17: போடி வஉசி நகரைச் சேர்ந்தவர் தீபக் (29). இவர் தனது சொந்த காரில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26) என்ப வரை உடன் அழைத்துக் கொண்டு போடி அருகே வடக்கு மலைப்பாதையில் உள்ள சோலையில் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் அதே காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது சிறைக்காடு பிரிவில் திடீரென மாடு குறுக்கே வந்ததால் கார் நிலைதடுமாறி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீபக் படுகாயமடைந்தார். மேலும், காயமின்றி உயிர் தப்பிய நண்பர் கார்த்திக் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேல் சிகிச்சைக்காக தேனி மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தீபக் குரங்கணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ செல்லப்பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கார் விபத்தில் வாலிபர் படுகாயம்
previous post