*சீனப்பெண்ணை கரம் பிடித்தார் தேனி வாலிபர்
ஆண்டிபட்டி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அமுதன் – சரவணகுமாரி தம்பதி. இவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்று சான்பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகின்றனர். தருண்ராஜ், கிரண்ராஜ் என 2 மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் தருண்ராஜ் பொறியல் பட்டப்படிப்பை அமெரிக்காவில் முடித்து, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த சீனாவை சேர்ந்த பீட்டர்ஜூ – பிங்வூ தம்பதியின் மகளான சுனோ ஜூ என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், தருண்ராஜ்- சுனோ ஜூ ஜோடிக்கு அமெரிக்காவில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனையடுத்து திருமணம் பாரம்பரிய முறைப்படி மணமகனின் சொந்த ஊரான தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அம்மச்சியாபுரம் கிராமம் அருகே க.விலக்கு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.