உடன்குடி,செப்.11: வேப்பங்காட்டில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது. உடன்குடி யூனியன் கவுன்சிலர் தங்கலெட்சுமி ஆதிலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியை அழகுமணி வரவேற்றார். நங்கைமொழி பஞ். தலைவர் விஜயராஜ், துணைத்தலைவர் பொன்செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, பொன்மணி, ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, பேரையூர் ஆசிரியை பாலசரஸ்வதி, கவிதா சிவாந்தன் முன்னிலை வகித்தனர். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் செல்வகுமார் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
பள்ளிச் செயலாளர் ஆதிலிங்கம் ஏற்புரை வழங்கினார். இதைத்தொடர்ந்து கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஜவஹர் சித்திரைவேல், ஆதிஅண்ணாவி, சேவாபாரதி மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், நிர்வாக உறுப்பினர்கள் அருணாசலம், சுரேஷ்குமார், சேர்மத்துரை, ஆசிரியர்கள் சுப்புலெட்சுமி, லதா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி மாணவ- மாணவிகள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாககுழு தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் ஆதிலிங்கம், பொருளாளர் வைகுண்டராமன் செய்திருந்தனர்.