ஜெயங்கொண்டம், செப்.11: 108 ஆம்புலன்ஸில் காலி பணியிடங்களை நிரப்ப முதற்கட்ட நேர்முகத் தேர்வு செப்டம்பர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கு முதற்கட்ட நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது.
தேர்வில் கலந்து கொள்வோருக்கு தேவையான அடிப்படைக் கல்வி தகுதி வயதுவரம்பு முதலில் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை முதலுதவி, செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்பட்டும் இறுதியாக மனித வள துறையின் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தகுதியின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ்கான வேலை வாய்ப்பு முகாமில் நேர்முக தேர்வில் அவசர மருத்துவ உதவியாளர் பணிக்கு 9 பேர்களும், பைலட்(ஓட்டுனர்) பணிக்கு 7 பேர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.