சிவகங்கை, செப். 11: சிவகங்கையில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜான்பீட்டர் தலைமை வகித்தார். டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாயதைனேஸ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் அன்பரசுபிரபாகரன், சேசுராஜ், டேவிட்அந்தோனிராஜ், முத்துப்பாண்டியன், அழகப்பன், ராமராஜன், அருள் மற்றும் பேசினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் சிறப்புரையாற்றினார்.