Friday, September 20, 2024
Home » என் படைப்பையும் உழைப்பையும் கொண்டாடி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி இயக்குநர் மாரி செல்வராஜ்..!!

என் படைப்பையும் உழைப்பையும் கொண்டாடி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி இயக்குநர் மாரி செல்வராஜ்..!!

by Lavanya

சென்னை: என் படைப்பையும் உழைப்பையும் கொண்டாடி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். மாமன்னன் படத்துக்கு அடுத்ததாக வாழை படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இந்தப் படம் (ஆகஸ்ட்.23) திரையரங்குகளில் வெளியாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தை இயக்குனர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், வாழை படத்தைப் பார்த்து ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் அதில்,

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!

தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ்க்கு மீண்டும் வாழ்த்துகள் என முதல்வர் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதல்வர் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வருக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன், இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

11 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi