Thursday, September 19, 2024
Home » சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பணம் கேட்ட தீட்சிதர்கள்: போலீசில் பெண் பக்தர் அளித்த புகாரால் பரபரப்பு

சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பணம் கேட்ட தீட்சிதர்கள்: போலீசில் பெண் பக்தர் அளித்த புகாரால் பரபரப்பு

by Nithya

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் தீட்சிதர்கள் பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. சிதம்பரம் நகரை சேர்ந்த ஜெயசீலா என்பவர் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றபோது கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் சார்பில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும், கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய சென்ற வேறு சில பக்தர்களிடம் கோயில் தீட்சிதர்கள் பணம் கேட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு சென்ற ஜெயசீலா, கோயிலில் நடந்த சம்பவங்கள் குறித்தும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீசில் புகார் அளித்தார். இதேபோல ஏற்கனவே தீட்சிதர்கள் மீது ஜெயசீலா போலீசில் புகார் அளித்து அதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi