Friday, September 20, 2024
Home » பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி

by MuthuKumar

பெரம்பலூர், ஆக.26:பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டின் தமிழ் நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப் பிப்பதற்கான கால அவகாசம் செப்-2 ம் தேதி வரை நீட்டிக்கப் பட் டுள்ளது. ஆர்வமுடையோர் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஷ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப் பின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப் படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ25கோடி உட்பட ரூ59.89 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளை யாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத் திற னாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகை களில் மாவட்ட, மண்டல மற்றும் மாநிலஅளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிகளில் மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ75 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ50ஆயிரமும் வழங்கப் படும். குழுபோட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறு பவர்களுக்கு முதல்பரிசாக தலா ரூ75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ25 ஆயிரமும் பரிசாக வழங்கப் பட உள்ளது. இந்தாண்டு தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ் நாடுஅரசு முதன்முறையாக நான்காமிடம் பெறுபவ ருக்கு மூன்றாம் பரிசிற்கு இணையாக பரிசு வழங்கப் படவுள்ளது.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சீரிய முயற் சியால் இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ37 கோடி யாக உயர்த்தி வழங்கப் படவுள்ளது.

போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகை களும் பெற இயலும். தமிழ்நாடு முழுவதிலும் 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களும், 15 வயது முதல் 35வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத் திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப் பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க ஆக-25ம் தேதி முன்பதிவு செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற் போது வருகிற செப்-2ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https:/sdat.tn.gov.in < http://sdat.tn.gov.in/ > என்ற இணையதளம் மூலம் முன்பதிவுசெய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இணையதளம் வாயிலாக மட்டுமேமுன்பதிவு செய்திட வேண்டும், நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தாங்களாகவோ தங்கள் பள்ளி, கல்லூரியின் மூல மாகவோ முன்பதிவுசெய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஷ்வரி தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

twelve + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi