Friday, September 20, 2024
Home » விசாகப்பட்டினம் அருகே கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்களை மீட்ட சென்னை மீனவர்கள்..!!

விசாகப்பட்டினம் அருகே கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்களை மீட்ட சென்னை மீனவர்கள்..!!

by Lavanya

சென்னை: விசாகப்பட்டினம் அருகே கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்களை சென்னை காசிமேடு மீனவர்கள் மீட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற குணபாலசிங்கம், ராமசந்திரன், ஹேமஸ்ரீ, முஸ்தகின் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ஏற்பட்ட காற்றின் வேகம் காரணமாக 4 இலங்கை மீனவர்கள் திசை திரும்பி காணாமல் போகினர்.

அப்போது அவ்வழியாக வந்த தமிழ்நாட்டு மீனவர்கள் நடுக்கடலில் பழுதடைந்த ஒரு படகில் இலங்கை மீனவர்கள் 4 தத்தளித்ததைப் பார்த்து, காசிமேடு மீனவர்கள் மீட்டனர். இலங்கை மீனவர்கள் 4 பேரையும் மீட்டு காசிமேடு மீனவர்கள் தங்கள் படகிலேயே 10 நாட்கள் தங்க வைத்துள்ளனர். சென்னை திரும்பி வரும்போது படகில் 4 இலங்கை மீனவர்கள் இருப்பது குறித்து 21ம் தேதி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். 4 இலங்கை மீனவர்களிடம் ஒன்றிய உளவுத்துறை, குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

9 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi