Sunday, September 22, 2024
Home » தோட்டத்தில் அழுகிய நிலையில் கிடந்த பெண் பிணம்: வடமதுரை அருகே பரபரப்பு

தோட்டத்தில் அழுகிய நிலையில் கிடந்த பெண் பிணம்: வடமதுரை அருகே பரபரப்பு

by Ranjith

 

வடமதுரை, ஆக. 20: வடமதுரை அருகேயுள்ள வடுகபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியக்காள் (69). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் காளியம்மாள் (45). இவர் திருமணம் முடிந்து தென்னம்பட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆக.14ம் தேதி காளியம்மாள் தனது தாய் பெரியக்காளை பார்ப்பதற்காக வடுகபட்டிக்கு சென்றுள்ளார்.

அப்போது பெரியக்காள் வீட்டில் இல்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடி வந்தார். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தின் அருகே உடல் அழுகிய நிலையில் பெரியக்காள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

எஸ்ஐ சித்திக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெரியக்காளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பெரியக்காள் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பெரியக்காள் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

You may also like

Leave a Comment

six + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi