Friday, September 20, 2024
Home » இனப்படுகொலை குற்றச்சாட்டு: ஷேக் ஹசீனா மீதான விசாரணை துவக்கம்

இனப்படுகொலை குற்றச்சாட்டு: ஷேக் ஹசீனா மீதான விசாரணை துவக்கம்

by MuthuKumar

டாக்கா: வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த 5ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனை தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற முகம்மது யூசுப் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஹசீனா அரசு கவிழ்ந்ததை அடுத்து நடந்த வன்முறை சம்பவங்களில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மூன்று வார வன்முறை சம்பவங்களில் இந்த பலி எண்ணிக்கை 560ஆக அதிகரித்தது.

இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்ததால் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் முன்னாள் பிரதமர் கலிஜா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சியினர் நேற்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைகளுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே இடைக்கால அரசானது, ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை மாணவர்கள் போராட்டத்தின்போது நடந்த இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை தொடங்கியுள்ளது.

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi