டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர். தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளும் ராகுல் காந்தியை சந்தித்தனர். இலங்கை கடற்படை தாக்குதல், மீனவர்கள் சிறைபிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார் ராகுல் காந்தி. தமிழ்நாடு எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.