மதுரை: விவசாயி குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தவமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விவசாயியை சரக்கு வாகனங்களில் வரக்கூடாது என ஆபாசமாக பேசி திட்டிய வீடியோ வைரலானதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவமணி மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.