சென்னை: தமிழகம் முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. டிபார்ட்மெண்ட் கடைகளின் போட்டியை சமாளிக்கவும், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும் கூடுதலாக அமுதம் அங்காடிகள் அமைக்கப்படுகிறது. செல்ஃப் சர்வீஸ் முறையில் இயங்கும் இந்த அங்காடிகள் அமுதம் அங்காடிகள் என்று அழைக்கப்படுகின்றன.