தேனி: ஆண்டிபட்டியில் பேருந்தில் மாணவிகளை கேலி செய்தவர்களை 9-ம் வகுப்பு மாணவன் தட்டிக் கேட்டார். மாணவிகளை கேலி செய்ததை தட்டிக்கேட்ட சிறுவனை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த சிறுவன், பெற்றோர் உதவியுடன் ஏத்தகோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆண்டிபட்டி தனியார் மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.