தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பாதாள சாக்கடை சரி செய்து கொண்டிருக்கும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாநகராட்சி 35 வது வார்டில் பாதாள சாக்கடை சரி செய்து கொண்டிருக்கும்போது மண் சரிந்து விழுந்து இரண்டு தொழிலாளிகள் உள்ளே சிக்கிக் கொண்டதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவர் உயிரிழந்தார்.