சென்னை: வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள 8 மலை கிராமங்கள் இருக்கும் மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மழை நாட்களில் கண்காணிக்கவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க ஆணையிடப்பட்டது. மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மலை கிராம மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
previous post