திருப்பூர், ஆக.2: திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் சூப்பிரண்டாக பெரிச்சிபாளையத்தைச் சேர்ந்த தனபால் (41) பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன் 3-ம் தேதி இரவு கடையை அடைத்து விட்டு மது விற்பனை செய்த பணத்துடன் தனபால் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற போது, இருட்டு பகுதியில் மறைந்திருந்த 5 பேர் கும்பல் தனபாலை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி,ரூ.2.50 லட்சத்தை பறித்து தப்பினர்.
இதுதொடர்பாக காயமடைந்த தனபால் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை சேர்ந்த முருகன் (42) உள்பட 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த வள்ளிநாயகம் (40) என்பவரை தனிப்படை போலீசார் மதுரையில் கைது செய்தனர்.