நாமக்கல்: ரூ.50 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி தலைமறைவாகி உள்ளார். நிலமோசடி வழக்கில் பொன்னுசாமி மீது நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொன்னுசாமியை கைது செய்ய போலீஸ் அவரது வீட்டிற்கு சென்றபோது தலைமறைவானது தெரியவந்தது.