டெல்லி: இமாச்சலப்பிரதேசத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ள பாதிப்பு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். பாதிப்பு குறித்து முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கிடம் தொலைபேசியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். இமாச்சலப் பிரதேசத்துக்கு தேவையான அனைத்து வகை உதவிகளையும் ஒன்றிய அரசு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.