சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், உரிய சான்றிதழ் இல்லாமல் சிகிச்சை அளித்த இரு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான அகஸ்டின் என்பவர் ரஷியாவில் 2003ம் ஆண்டு மருத்துவம் படித்தும், இந்தியாவில் சிகிச்சை அளிப்பதற்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே சிகிச்சை அளித்து வந்துள்ளார். பரதன் என்பவர் சித்த மருத்துவம் படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளார்.