குளித்தலை, ஜூலை 31: குளித்தலை காவிரி நகர் பகுதியில் குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்க கட்டிட அலுவலகத்தில் கீழ்த்தழத்தில் முதலில் கூட்டுறவு வர்த்தகம் தொடங்கப்பட்டு மலிவு விலையில் 20 சதவீதம் தள்ளுபடி மருந்து விற்பனை செய்வதால் பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் மேலும்அப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் கடந்த 3.3. 2023 தேதி கூட்டுறவு சங்கங்களின் கரூர் மண்டல இணைப் பதிவாளர் கந்தராஜா கூட்டுறவு தேநீரகம் மற்றும் ஆவின் உற்பத்தி பொருள் விற்பனை ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து மக்கள் பேராதரவுடன் இந்த கூட்டுறவு தேனீரக விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால் இந்த தேனீரகத்தில் தரமான காப்பி டீ மற்றும் ஆவின் உற்பத்தி பொருட்களான நெய், தயிர், பால், வெண்ணெய், மற்றும் பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தரமான பொருட்களால் தயாரிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் விரும்பி இந்த கூட்டுறவு தேநீரகத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விற்பனையும் அதிகரித்து வருகிறது.இதற்குக் காரணம் தரமான பொருட்கள் விற்பனை செய்வதால் தான் என பொதுமக்கள் கூட்டுறவு துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.