பாரிஸ் ஒலிம்பிக் 10மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய இணை வெண்கலம் வென்றது. வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் கொரிய இணையை வீழ்த்தி இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை 22 வயதான மனு பாக்கர் பெற்றுள்ளார்.