சேலம், ஜூலை 30: சேலம் சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (72). விவசாயியான இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது பக்கத்து காட்டை சேர்ந்த அருள்தாஸ் என்பவருக்கும், பரமேஸ்வரனுக்கும் இடையே நிலப்பிரச்னை உள்ளது. பரமேஸ்வரன் நிலத்தின் பகுதியை அருள்தாஸ் தரப்பினர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பரமேஸ்வரன் தனது இடத்தை சுற்றி கம்பிவேலி அமைத்திருந்தார். அதனை அருள்தாஸ் தரப்பினர் சேதப்படுத்தினர். மேலும், பரமேஸ்வரனுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பரமேஸ்வரன் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அருள் தாஸ் (எ) அருண்குமார், சேகர், பாக்கியம், ஷியமளா, மற்றொரு சேகர் ஆகிய 5பேர் மீது இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாய நிலத்தில் முள்வேலியை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு
previous post