விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரை சேர்ந்தவர் கண்ணதாசன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி செல்லக்கிளி(37). கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக தெரிகிறது. அதை தடுத்து போராடியதால் செல்லக்கிளியை பலமாக தலையில் தாக்கி விட்டு மர்ம நபர் தப்பி விட்டார். வெளியில் சென்றிருந்த தாய் திரும்பி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்லக்கிளியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செல்லக்கிளி நேற்று இறந்தார்.