சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 26.7.2024ல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொல்லியல் துறை தேர்விற்கும், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக பணிகளுக்கும் சமஸ்கிருத பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருப்பது மிகுந்த வியப்பளிக்கிறது. சமஸ்கிருத பாடம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் எதிலும் இல்லாத நிலையில், சமஸ்கிருத பட்டம் எவ்வாறு பெற முடியும்? அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், தேர்வாணையம் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அரசு தலையீட்டு, உடன் தேர்வாணைய அறிவிப்பை ரத்து செய்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.