வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த வல்லப்பாக்கம் மந்தவெளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன் (57). தினக்கூலி வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர், பீர் பாட்டிலால் நீலகண்டனின் தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதில் அவரது அலறல் சத்தம்கேட்டு மனைவி மற்றும் மகன்கள் வெளியே வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த நீலகண்டனை மீட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.