திருச்சி: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அறிவிப்பின்படி திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள இந்தியன் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட தலைவர் திருச்சி கலை, மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் மோகனாம்பாள், கே.பி.ராஜா, மாவட்ட பொறுப்பாளர்கள் பாட்ஷா, நாராயணன், குழந்தைசாமி, அலெக்ஸ், செல்வராஜ், மணவை ராணி, பரமேஸ்வரி, சுதா, காந்திமதி, வட்டாரத் தலைவர்கள் ரவிசங்கர், ஐய்யமுத்து, மாணிக்கம், நல்லேந்திரன், மணிமாறன், சுப்பிரமணி, இளங்கோவன், சாந்தகுமார், நகரத் தலைவர்கள் சுந்தர்ராஜ், ஆனந்தபாபு, சுப்பிரமணி, ராமநாதன், திருமுருகன், அருணாச்சலம், பொன்னர், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரபாகரன், விஜய், பாபு, ஜெயராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.