திருமலை: ஒன்றிய பட்ஜெட்டில் தெலங்கானா மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் உருவ ெபாம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்ததோடு பெயரைக் கூட குறிப்பிடாமல் பட்ஜெட் வெளியிடப்பட்டது.
இதனை கண்டித்து தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள் பண்டி சஞ்சய் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோரின் உருவ பொம்மையை உஸ்மானியா பல்கலைகழகத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர்கள் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மத்திய பட்ஜெட்டில் தெலங்கானா பெயரைக் குறிப்பிடாதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.