நெல்லை: நெல்லையில் இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். நெல்லையில் 16 வயது சிறுமி ஒருவரை வாலிபர், ஓராண்டுக்கு மேலாக இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து, ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார்.
மேலும் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறுப்படுகிறது. சிறுமி கர்ப்பிணியான நிலையில், மருத்துவமனையில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் நெல்லை தாலுகா அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.