ராமநாதபுரம்: மண்டபம் மற்றும் பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 65 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.