சென்னை: பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல அதிமுக செயல்பாடு உள்ளது என மின்கட்டண உயர்வு குறித்து அதிமுக போராட்டம் நடத்தியது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். ஒன்றிய அரசு உதய் திட்டத்தை கொண்டுவந்தபோது முதல்வராக இருந்த ஜெயலலிதா அதில் கையெழுத்திட மறுத்துவிட்டார். உதய் மின்திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்து கையெழுத்திட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.