சோளிங்கர்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் கடந்த 19ம் தேதி தலித் கூட்டமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்த இந்திய குடியரசு கட்சி நிர்வாகி இளையராஜா(40) அமைச்சர் துரைமுருகன் குறித்து தகாத வார்த்தைகளாலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியுள்ளார். இது குறித்து சோளிங்கர் போலீசில் விஏஓ சங்கரநாராயணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் மாலை கொடைக்கல் பஸ் நிறுத்தம் அருகே பதுங்கியிருந்த இளையராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.