மதுரை : மதுரை ரவுடி அட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க கோரி வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.மதுரை ரவுடி அட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க கோரி அவரது மனைவி ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால் பரோல் வழங்க முடியாது என சிறைத்துறை தரப்பில் வாதம் செய்தது. சிறை துறையின் வாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.