டெல்லி :அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான தடையை இப்போது நீக்கியது ஏன் என்று ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர்,”“அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான தடை உத்தரவை ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு இருந்தபோதும் வாபஸ் பெறப்படவில்லை, இப்போது ஏன் அதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அரசு பதில் தர வேண்டும்”” இவ்வாறு தெரிவித்தார்.